தகுதி பெற்றுவிட்டபோதிலும் கோல் பசி தணியாது தடையறத் தாக்கிய இங்கிலாந்து

தகுதி பெற்றுவிட்டபோதிலும் கோல் பசி தணியாது தடையறத் தாக்கிய இங்கிலாந்து

1 mins read
7e2f7061-729e-43e0-a89c-42b74f9e0b2e
தாக்குதலில் தீவிரம் காட்டிய இங்கிலாந்து மகளிரைச் சமாளிக்க முடியாமல் தவித்த வடஅயர்லாந்துக் குழு.படம்: இபிஏ -

சவுத்­ஹேம்­டன்: மக­ளிர் ஐரோப்­பிய காற்­பந்­துப் போட்­டி­யின் காலி­றுதி ஆட்­டத்­துக்கு ஏற்­கெ­னவே தகுதி பெற்­று­விட்­ட­போ­தி­லும் முதல்

சுற்­றின் கடைசி ஆட்­டத்­தில்

இங்­கி­லாந்து கோல் வேட்­டை­யில்

இறங்­கி­யது.

மிகுந்த முனைப்­பு­டன், இடை­வி­டாது தாக்­கு­தல் நடத்­திய இங்­கி­லாந்து கோல் மழை பொழிந்து வட­அ­யர்­லாந்தை 5-0 எனும் கோல் கணக்­கில் பந்­தா­டி­யது.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று நார்­வேயை இங்­கி­லாந்து வேட்­டை­யாடி 8-0 எனும் கோல் கணக்­கில் வீழ்த்­தி­யது குறிப்­பி­டத்­தக்­கது.

போட்­டி­யில் தொடர் தோல்­வி­

க­ளைச் சந்­தித்த நார்வே காலி­றுதி வாய்ப்பை இழந்­தது. நேற்று முன்­தி­னம் அது ஆஸ்­தி­ரி­யா­வி­டம் 1-0 எனும் கோல் கணக்கில் தோற்­றது.