பர்மிங்ஹம்: இலங்கையை உலுக்கி வரும் மிகக் கடுமையான பொருளியல் நெருக்கடி, காமன்வெல்த் போட்டிகளில் பங்கெடுக்கும் அந்நாட்டு வீரர்களையும் வாட்டி வதைக்கிறது. புதிய சீருடைகள், காலணிகள் போன்றவற்றை வாங்க இலங்கை அணியினரிடம் போதிய பணம் இல்லை என்று அந்த அணியின் தலைவர் டம்பத் ஃபெர்னாண்டோ வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும், போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று இலங்கை வீரர்கள் முனைப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. போட்டிக்காக இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்பே இலங்கையில் பொருளியல் நெருக்கடி காரணமாகப் பல சவால்களைச் சந்தித்ததாக அந்நாட்டின் சீருடற்பயிற்சிப் போட்டி வீரர் ருச்சிரா ஃபெர் னாண்டோ கூறினார்.
இலங்கை வீரர் ருச்சிரா ஃபெர்னாண்டோ.
படம்: ருச்சிரா ஃபெர்னாண்டோ

