ஈட்டி எறிதல்: மீண்டும் வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதல்: மீண்டும் வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா

1 mins read
65ba5d5c-71b4-45a5-aa93-5ec5abf6c819
-

லுசான்: ஸ்விட்­சர்­லாந்து நாட்­டில் நடை­பெற்ற லுசான் டைமண்ட் லீக் போட்­டி­த் தொடரில் ஈட்டி எறி­த­லில் இந்­தி­யா­வின் நீரஜ் சோப்ரா (படம்) முத­லி­டம் பிடித்துள்­ளார். இதன் மூலம் இப்­பட்­டத்தை வெல்­லும் முதல் இந்­தி­யர் என்ற பெரு­மை­யை­யும் இவர் பெற்­று உள்ளார்.

இப்­போட்­டி­யில் 89.08 மீட்­டர் தூரத்­திற்கு ஈட்டி எறிந்த நீரஜ், அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள சூரிக் டைமண்ட் லீக் போட்­டிக்கு முன்­னேறி ­உள்­ளார்.

அத்­து­டன் 2023 உல­கத் திடல்­தட சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­யில் கலந்­து­கொள்­வ­தற்­கும் அவர் தகுதி பெற்­றுள்­ளார்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றிருந்த 24 வயது நீரஜ் சோப்ரா, அதன் பிறகு நடைபெற்ற காமன்­வெல்த் தொட­ரில் இருந்து காயம் கார­ண­மாக விளையாட முடியாமல் போனது. காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், டைமண்ட் லீக்­கில் அதி­ரடி சாதனை படைத்­திருக்­கி­றார்.

இது­வரை மூன்று முறை

89 மீட்­டருக்கு மேல் ஈட்டி எறிந்து சாதனை படைத்­தி­ருக்­கி­றார் நீரஜ்.

சென்ற ஜூன் மாதம் ஃபின்லாந்­தில் நடை­பெற்ற பாவோ நுர்மி போட்­டி­யில் 89.30 மீட்­டர் தூர­மும் ஜூலை மாதம் நடை­பெற்ற ஸ்டாக்­ஹோம் டைமண்ட் லீக் போட்­டி­யில் 89.94 மீட்­டர் தூரத்­திற்­கும் நீரஜ் ஈட்டி எறிந்­தி­ருந்­தார். படம்: ராய்ட்டர்ஸ்