பாகிஸ்தானைப் பழிதீர்க்கும் முனைப்பில் இந்திய அணி

பாகிஸ்தானைப் பழிதீர்க்கும் முனைப்பில் இந்திய அணி

2 mins read

அபுதாபி: பெரும் எதிர்­பார்ப்­புக்கு மத்­தி­யில், ஆசி­யக் கிண்ண கிரிக்­கெட் தொட­ரில் இந்­தியா-பாகிஸ்­தான் அணி­கள் இன்று மோத­வுள்­ளன.

இந்­தியா, பாகிஸ்­தான், இலங்கை, ஆப்­கா­னிஸ்­தான், பங்­ளா­தே‌ஷ், ஹாங்­காங் ஆகிய 6 அணி­கள் பங்­கேற்­கும் 20 ஓவர் ஆசியக் கிண்ண கிரிக்­கெட் போட்டி ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­களில் நேற்று தொடங்­கி­யது. முதல் லீக் சுற்று ஆட்­டத்­தில் ஆப்­கா­னிஸ்­தா­னும் இலங்­கை­யும் மோதின.

ஒரே பிரி­வில் இடம்­பி­டித்­துள்ள இந்­தி­யா­வும் பாகிஸ்­தா­னும் இன்று மோது­கின்­றன.

துபாய் அனைத்­து­லக கிரிக்­கெட் விளை­யாட்­ட­ரங்­கில் சிங்­கப்­பூர் நேரப்­படி இன்று இரவு 10.00 மணிக்கு இப்­போட்டி தொடங்­கும்.

கடந்த ஆண்டு நடை­பெற்ற

20 ஓவர் உல­கக் கிண்­ணப் போட்டி­யின்­போது இந்­திய அணியை 10 விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் வீழ்த்தி பாகிஸ்­தான் அணி அதிர்ச்சி அளித்­தி­ருந்­தது. இத­னால் இந்த தொட­ரில் பாகிஸ்­தான் அணிக்­குப் பதிலடி கொடுக்­கும் முனைப்­பில் கள­மிறங்கு­கிறது இந்­திய அணி.

ரோகித் சர்மா தலை­மை­யில் களம் காணும் இந்­திய அணி­யில், ரிஷப் பண்ட், சூர்­ய­கு­மார், தினேஷ் கார்த்­திக், பாண்­டியா ஆகி­யோர் அணிக்­குப் பலமாக இருப்பர். சுழலில் யுசுவேந்­திர சஹல் எதி ரணிக்குச் சவாலாக இருப்பார்.

இந்­திய அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர் ஜஸ்­பி­ரித் பும்ரா காயம் கார­ண­மாக கடைசி நேரத்­தில் ஆசி­யக் கிண்­ணத் தொட­ரில் இருந்து விலக நேர்ந்தது.

அதே­போல் பாகிஸ்­தான் தரப்­பி­லும் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ளர்­களில் ஒரு­வ­ரான ஷாஹீன் அஃப்ரி­டி­யும் காயம் கார­ண­மாக வில­கி­யி­ருக்­கி­றார்.

பும்ரா இல்­லாத குறையை அர்ஷ்­தீப் சிங் பூர்த்தி செய்­யக்­கூ­டும். ஏனெ­னில் 20 ஓவர் போட்­டி­களில் பும்­ரா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக குறைந்த ஓட்­டங்­களை விட்டுக் கொடுப்பவராக அவர் உரு­வெ­டுத்­துள்­ளார்.

அத்­து­டன் இந்தியாவின் புதிய அணுகுமுறையும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முத­லில் நிதா­ன­மா­க­வும் கடைசி ஓவர்­களில் அதி­ர­டி­யா­க­வும் விளை­யாடி வந்த இந்­திய அணி, இப்­போ­தெல்­லாம் தொடக்­கம் முதலே ஆக்­ரோ­‌ஷ­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தி வரு­கிறது.

இத­னால், பவர்­பி­ளே­வில் இந்­திய அணி­யின் ஓட்ட விகி­தம் சீராக முன்­னேற்­றம் கண்­டுள்ளது. 2021ல் 7.87ஆக இருந்த ஓட்ட விகி­தம் இவ்வாண்டு 8.67ஆக உயர்ந்­தது.

அந்த வகை­யில் ஆசி­யக் கிண்­ணப் போட்­டி­யில் இந்­திய அணிக்­கான சுய­ப­ரி­சோ­த­னை­யா­க­வும்

20 ஓவர் உல­கக் கிண்­ணப் போட்டிக்­கான முன்­னோட்­ட­மா­க­வும் இருக்­கும் என்று கரு­தப்­ப­டு­கி

றது.