இந்தியா-ஆஸ்திரேலியா: இன்று 3வது டி20 போட்டி

இந்தியா-ஆஸ்திரேலியா: இன்று 3வது டி20 போட்டி

2 mins read

ஹைத­ரா­பாத்: இரு அணி­களும் தரப்புக்கு ஒரு போட்­டி­யில் வென்­றி­ருப்­ப­தால் தொடரை வெல்­லப்­போவது யார் என்­பதை முடி­வு­செய்­யும் மூன்­றா­வது டி20 கிரிக்­கெட் போட்­டி­யில் இந்­தி­யா­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் இன்­றி­ரவு பொரு­த இ­ருக்­கின்­றன.

மொகா­லி­யில் நடந்த முதல் போட்­டி­யில் ஆஸ்­தி­ரே­லியா வென்­றது. இந்­நி­லை­யில், 2வது போட்டி நேற்று முன்­தி­னம் இரவு நாக்­பூ­ரில் நடந்­தது.

மழை­யால் எட்டு ஓவர்­க­ளா­கக் குறைக்­கப்­பட்ட இப்­போட்­டி­யில் முத­லில் ஆஸ்­தி­ரே­லியா பந்­த­டித்­தது. அவ்­வணி எட்டு ஓவர்­களில் ஐந்து விக்­கெட் இழப்­பிற்கு 90 ஓட்­டங்­களைச் சேர்த்­தது. இரண்டு ஓவர்­களை வீசி, 13 ஓட்­டங்­களை மட்­டும் விட்­டுக்­கொ­டுத்து, இரண்டு விக்­கெட்­டு­க­ளைக் கைப்­பற்­றி­னார் இந்­தி­யச் சுழற்­பந்­து­வீச்­சா­ளர் அக்­சர் பட்­டேல்.

அடுத்து பந்­த­டித்த இந்­திய அணி­யில், தலை­வர் ரோகித் சர்மா 20 பந்­து­களில் 46 ஓட்­டங்­களை விளாசி, இறு­தி­வரை களத்­தில் இருந்­தார். கடை­சி­யில் வந்த தினேஷ் கார்த்­திக் இரண்டு பந்து­களில் ஒரு பவுண்­ட­ரி­யை­யும் ஒரு சிக்­ச­ரை­யும் விளா­சி­னார். இத­னை­ அடுத்து, நான்கு பந்­து­கள் எஞ்சி­ இருந்த நிலை­யில் இந்­திய அணி ஆறு விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற்­றது.

சிக்சரில் ரோகித் முதலிடம்

அனைத்­து­லக டி20 போட்­டி­களில் அதிக சிக்­சர் அடித்­தோர் பட்­டி­ய­லில் முத­லி­டத்­திற்கு முன்­னே­றி­னார் ரோகித் சர்மா. நேற்று முன்­தி­னம் நடந்த ஆட்­டத்­தில் அடித்த நான்கு சிக்­சர்­க­ளு­டன் சேர்த்து இது­வரை அவர் 176 சிக்­சர்­களை விளாசி உள்­ளார். மார்ட்­டின் கப்­டில் (172, நியூ­சி­லாந்து), கிறிஸ் கெய்ல் (124, வெஸ்ட் இண்­டீஸ்), மோர்­கன் (120, இங்­கி­லாந்து), ஆரோன் ஃபிஞ்ச் (119, ஆஸ்­தி­ரே­லியா) ஆகி­யோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.