லண்டன்: யுயேஃபா நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்தும் ஜெர்மனியும் 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டுள்ளன.
இந்த A3 பிரிவு ஆட்டத்தின் கடைசி 20 நிமிடங்களில் கோல் மழை பொழிந்தது.
71வது நிமிடத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் ஜெர்மனி முன்னணி வகித்தது.
83வது நிமிடத்திற்குள் 3-2 எனும் கோல் கணக்கில் முன்னுக்குச் சென்றது இங்கிலாந்து.
87வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியது.
லூக் ஷோ, மேசன் மெளன்ட், ஹேரி கேன் ஆகியோர் இங்கிலாந்தின் கோல்களைப் போட்டனர்.
பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கினார் அணித்தலைவர் கேன்.
ஜெர்மனியின் கோல்களில் இரண்டைப் போட்டவர் காய் ஹாவர்ட்ஸ்.
பெனால்டி வாய்ப்பைக் கோலாக்கி மற்றொரு கோலைப் போட்டார் இல்க்காய் குண்டோகன்.
கடந்த சில வாரங்களாக கோல் போடவே சிரமப்பட்டு வந்த இங்கிலாந்து இந்த ஆட்டத்தில் நன்கு மீண்டு வந்தது.
எனினும், இவ்வாண்டு அரங்கேறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாகச் செய்ய அணி நன்கு மேம்படவேண்டும்.