அரையிறுதியில் லோ கியன் இயூ

அரையிறுதியில் லோ கியன் இயூ

1 mins read

கோபன்ஹேகன்: டென்மார்க் பொது விருது பூப்­பந்­துப் போட்­டி­யின் அரை­யி­று­திச் சுற்­றுக்கு சிங்­கப்­பூ­ரின் நட்­சத்­திர வீரர் லோ கியன் இயூ தகுதி பெற்­றுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆண்­கள் ஒற்­றை­யர் பிரி­வு

காலி­றுதி ஆட்­டத்­தில் டென்­மார்க்­கின் விக்­டர் அக்­சல்­சனை அவர் 21-17, 21-10 என வீழ்த்­தி­னார்.

ஆட்­டத்தை வெறும் அரை மணி நேரத்­தில் லோ கைப்­பற்­றி­னார்.

உல­கப் பூப்­பந்து வீரர்­கள் தர­

வ­ரி­சை­யில் அக்­சல்­சன் முத­லி­டத்­தில் உள்­ளார் என்­பது குறிப்­

பி­டத்­தக்­கது.

தொடர்ச்­சி­யாக 39 ஆட்­டங்­களில் வெற்றி பெற்ற அக்­சல்

­ச­னின் வெற்­றிப் பய­ணத்தை லோ முடி­வுக்­குக் கொண்டு வந்­தார்.

"அக்­சல்­சன் மிகச் சிறந்த ஆட்­டக்­கா­ர­ரர். எனவே, அவ­ரைத் தோற்­க­டிப்­பது மிகப் பெரிய சாதனை.

"இருப்­பி­னும், எந்த ஓர் ஆட்­டக்­கா­ர­ரா­லும் கள­மி­றங்­கும் அனைத்து ஆட்­டங்­க­ளி­லும் வெற்றி பெற முடி­யாது. அக்­சல்­

ச­னும் மனி­தர்­தான். அவர் மிக­வும் மதிக்­கத்­தக்க மனி­தர்," என்று வெற்­றிக்­குப் பிறகு லோ கூறி­னார்.

அரை­யி­று­தி­யில் அவர் பர­ம­வை­ரி­யான மலே­சி­யா­வின் லீ சி ஜியா­வு­டன் மோது­கி­றார்.