சிங்கப்பூர்: சிங்கப்பூர் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தை தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு நெருங்கியுள்ளது.
பாலஸ்டியர் கல்சாவுக்கு எதிரான அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் அது கோல் மழை பொழிந்து 8-1 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தெம்பனிஸ் குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் போரிஸ் கொபிட்டோவிச் மூன்று கோல் போட்டார்.
2020, 2021 ஆண்டுகளில் இப்போட்டி கொவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
2019ஆம் ஆண்டில் நடைபெற்ற இப்போட்டியில் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழு கிண்ணம் ஏந்தியது குறிப்பிடத்தக்கது.

