ஆக்லாந்து: மகளிருக்கான உலகக் கிண்ண ரக்பி போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று கிண்ணம் ஏந்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை அது 34-31 எனும் புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. கிண்ணத்தை இங்கிலாந்து எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அதற்குக் கடுமையான சவாலாக விளங்கியது.
தப்பாட்டம் காரணமாக இங்கிலாந்தின் லீடியா தாம்சன் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் ஆட்டத்தின் பெரும் பகுதியை வெறும் 14 ஆட்டக்காரர்களுடன் இங்கிலாந்து விளையாடியது.
இருப்பினும், வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் இரண்டு புள்ளிகள் முன்னிலையுடன் கிண்ணத்தை நெருங்கிக்கொண்டிருந்தது இங்கிலாந்து.
இந்நிலையில், ஆட்டம் முடிய ஒன்பது நிமிடங்கள் இருந்த நிலையில் நியூசிலாந்து அபாரமாக விளையாடி ஐந்து புள்ளிகளைப் பெற்றது.
இறுதி வரை முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்ட நியூசிலாந்து வெற்றி பெற்றது.

