அவசர அவசரமாக ஆள்சேர்த்தது

அவசர அவசரமாக ஆள்சேர்த்தது

2 mins read
12b2222c-7977-49c9-aa58-b42197696bdc
சுவிஸ் தேசிய காற்பந்து அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வேளையில், பாதுகாவல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர். படம்: இபிஏ -

உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு ஆள்பற்றாக்குறையை எதிர்நோக்கிய கத்தார்

தோஹா: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்டி தொடங்குவதற்கு மூன்றே வாரங்­கள் இருந்த நிலை­யில், கத்­தா­ரின் விளையாட்டாளர் பாதுகாப்புக் குழு நூற்­றுக்­க­ணக்­கான ஆட­வர்­க­ளைப் பாது­கா­வ­லர்­க­ளாக வேலைக்­குச் சேர்த்­தது.

விளை­யாட்­ட­ரங்­கு­களில் கூட்­டத்­தைக் கண்­கா­ணிப்­பது அவர்­களது பணி என்று வேலைக்­குச் சேர்ந்­த­வர்­களில் இரு­வர் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னர். பணி­ய­மர்த்­தப்­பட்­ட­வர்­களில் சில­ருக்கு அனு­ப­வம் கிடை­யாது.

இந்­தியா, பாகிஸ்­தான், பங்­ளா­தேஷ், சூடான், இந்­தோ­னீ­சியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து வந்த அந்த ஆட­வர்­கள், இந்த மாதத் தொடக்­கத்­தில் கத்­தா­ரின் காவல்­து­றைக் கல்­லூ­ரி­யில் பயிற்சி பெற்­ற­னர். சீரு­டை­க­ளைப் பெற்­றுக்­கொண்ட அவர்­கள், விளை­யாட்­ட­ரங்­கு­களில் நடை­பெற்ற பயிற்சி அமர்­வு­களில் முதன்­மு­றை­யாக பணி­ய­மர்த்­தப்­பட்­டனர்.

வேலைக்­குச் சேர்ந்­த­வர்­களில் சில­ருக்கு பாது­கா­வல் துறை­யில் அனு­ப­வம் இருந்­தி­ருந்­தா­லும், மற்ற சிலர் நாட்­கூ­லித் தொழி­லா­ளர்­களா­க­வும் ஓட்­டு­நர்­க­ளா­க­வும் அலு­வ­லக ஊழி­யர்­க­ளா­க­வும் பணி­யாற்றி இருந்­த­தாக வேலைக்­குச் சேர்ந்­த­வர்­களில் ஒரு­வர் கூறி­னார்.

ஒரு­மாத காலம் நடை­பெ­றும் உல­கக் கிண்­ணப் போட்­டியை முன்­னிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட இந்­தக் கடை­சிக்­கட்ட தயார்­நி­லைப் பணி­கள், கத்­தார் எதிர்­நோக்­கி­வ­ரும் தள­வா­ட­வி­யல் சவால்­களை வெளிச்­ச­மிட்டு காட்­டு­கின்­றன.

உல­கம் முழு­வ­து­மி­ருந்து 1.2 மில்­லி­யன் பேர் வரு­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால், பாது­கா­வல் பணி­க­ளுக்­காக 50,000க்கும் அதி­க­மா­னோ­ருக்கு கத்­தார் பயிற்சி அளித்­துள்­ளது.

மூன்று மில்­லி­யன் மக்­கள்­தொகை­யைக் கொண்­டுள்ள கத்தாரில் 12 விழுக்­காட்­டி­னர் மட்டுமே அந்­நாட்­டுக் குடி­மக்­க­ளா­வர். இத­னால், உல­கக் கிண்­ணப் போட்­டியை முன்­னிட்டு கத்­தார் ஆள்­பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்­கி­யது.

உல­கக் கிண்­ணப் போட்­டியை ஏற்று நடத்­தும் முதல் மத்­தி­யக் கிழக்கு நாடா­க­வும் ஆகச் சிறிய நாடா­க­வும் கத்­தார் விளங்­கு­கிறது. உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்­காக பில்­லி­யன் கணக்­கான டாலரை கத்­தார் செல­விட்­டா­லும், இவ்­வ­ளவு பெரிய அள­வி­லான விளை­யாட்டு நிகழ்வை அது இதற்கு முன்­ன­தாக நடத்­தி­ய­தில்லை.

காற்­பந்து ஆட்­டங்­கள் நடை­பெறும் இடங்­களில் சோத­னைச்­சா­வ­டி­களை நடத்­து­வ­தற்­கான கட்­டாய ராணு­வச் சேவைக்­காக, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து அர­ச­தந்­தி­ரி­கள் உள்­ளிட்ட நூற்­றுக்­க­ணக்­கான குடி­மக்­களை கத்­தார் வரச் சொல்­லி­ உள்­ளது.