தோஹா: இந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் ஆட்டங்களில் வரலாறு காணாத அளவில் கூடுதல் நேரம் சேர்க்கப்பட்டு வந்துள்ளது. இங்கிலாந்தம் ஈரானும் மோதிய ஆட்டத்தின் முற்பாதியில் 14 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. பிற்பாதியின் இறுதியிலும் சுமார் 13 நிமிடங்கள் கூட்டப்பட்டன.
நெதர்லாந்துக்கும் செனகலுக்கும் இைடயிலான ஆட்டத்திலும் பிற்பாதியில் சுமார் 10 நிமிடங்கள் கூட்டப்பட்டன. அமெரிக்காவும் வேல்சும் மோதிய ஆட்டத்தின் பிற்பாதியிலும் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் கூட்டப்பட்டன.
ஆட்டத்தில் தாமதம் ஏற்படும்போது வீணாகும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடுமாறு நடுவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் நடுவர்கள் தலைவர் பியர்லுயிஜி கொலினா சென்ற வாரம் தெரிவித்தார். அதனால் இந்நிலை உருவாகியுள்ளது.
விளையாட்டாளர்கள் காயமடைவதால் ஏற்படும் தாமதம், விளையாட்டாளர்கள் தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பதால் ஏற்படும் தாமதம் உள்ளிட்டவற்றுக்குச் செலவாகும் நேரம் துல்லியமாகக் கருத்தில்கொள்ளப்படும்.

