கெமரூனை வென்றது சுவிட்சர்லாந்து; கோல் போட்ட வீரர் கெமரூனில் பிறந்தவர்

கெமரூனை வென்றது சுவிட்சர்லாந்து; கோல் போட்ட வீரர் கெமரூனில் பிறந்தவர்

1 mins read

அல் வாக்­கிரா: நேற்று மாலை நடை­பெற்ற உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் 'ஜி' பிரிவு ஆட்­டத்­தில் கெம­ரூனை 1-0 எனும் கோல் கணக்­கில் வென்­றது சுவிட்­சர்­லாந்து. ஆட்­டத்­தின் ஒரே கோலைப் போட்­ட­வர் கெம­ரூ­னில் பிறந்து சுவிட்­சர்­லாந்­தில் வளர்ந்த பிரீல் எம்­போலா.

பிறந்த நாட்­டிற்கு அவ­ம­ரி­யாதை செய்­வ­தைத் தவிர்க்க கோல் போட்ட பிறகு கொண்­டா­ட­வில்லை எம்­போலோ. அதற்­குப் பதி­லாக அவர் கெம­ரூ­னி­டம் மன்­னிப்­புப் கேட்­கும் விதத்­தில் கைகளை உயர்த்­தி­ய­படி நின்­றார்.

ஆட்­டத்­தில் அதிக விறு­வி­றுப்பு இல்­லா­விட்­டா­லும் வெற்றி பெறு­வதற்­குத் தேவை­யா­ன­வற்­றைக் கச்­சி­த­மா­கச் செய்­தது சுவிட்­சர்­லாந்து.

1990ஆம் ஆண்­டுப் போட்­டி­யில் காலி­று­திச் சுற்­று­வரை முன்னேறிய கெம­ரூன் அதற்­குப் பிறகு முதல் சுற்­றைத் தாண்­டி­ய­தில்லை. அதை மாற்­று­வ­தற்­கான அணி­யின் முயற்சி­யில் இந்­தத் தோல்வி பின்­ன­டை­வாக அமைந்­துள்­ளது.

அடுத்­த­தாக வரும் திங்­கட்­கி­ழ­மை­யன்று கெம­ரூன், செர்­பி­யா­வைச் சந்­திக்­கும். அதே நாளில் சுவிட்­சர்­லாந்து, பிரே­சி­லு­டன் மோதும்.