12 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி

12 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி

1 mins read

அல் வாக்­கிரா: உல­கக் கிண்­ணக் காற்­பந்துப் போட்­டி­யின் 'டி' பிரிவு ஆட்­டத்­தில் துனி­சி­யாவை 1-0 எனும் கோல் கணக்­கில் வென்­றுள்­ளது ஆஸ்­தி­ரே­லியா. அதன் மூலம் 12 ஆண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு ஆஸ்­தி­ரே­லியா உல­கக் கிண்ணப் போட்டியின் ஆட்­டம் ஒன்­றில் வெற்றி கண்­டது.

ஆட்­டத்­தின் 23வது நிமி­டத்­தில் கோல் போட்­டார் அணியின் தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர் மிட்­செல் டியூக். முதல் ஆட்­டத்­தில் பிரான்­சி­டம் 4-1 எனும் கோல் கணக்­கில் தோல்­வி­ய­டைந்த ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு இந்த வெற்றி மிக­வும் முக்­கி­ய­மா­ன­தாக அமைந்தது.

உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் ஒரு­முறை மட்­டுமே இரண்­டாம் சுற்று வரை சென்றிருக்கும் ஆஸ்­தி­ரே­லியா, டென்­மார்க்­கிற்கு எதி­ரான அடுத்த 'டி' பிரிவு ஆட்­டத்­தில் வென்­றால் இப்­போட்­டி­யின் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றக்­கூ­டும். துனிசியா அந்த வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள நடப்பு வெற்றியாளர்கள் பிரான்சை வெல்லவேண்டும்.