அல் ரயான்: நெதர்லாந்தும் எக்குவடோரும் மோதிய உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'ஏ' பிரிவு ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆட்டம் தொடங்கி சுமார் ஐந்தே நிமிடங்களில் நெதர்லாந்தை முன்னுக்கு அனுப்பினார் கொடி காக்போ. பிற்பாதியில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் எக்குவடோர் அணித் தலைவர் எனர் வலென்சியா.
நெதர்லாந்து கோல் வாய்ப்புகளை உருவாக்க சிரமப்பட்டது. அதன் விளையாட்டில் உற்சாகம் இல்லை.
எனினும், போட்டியில் போகப் போக நெதர்லாந்து சிறப்பாக விளையாடும் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகச் சொன்னார் அணித் தலைவர் வெர்ஜில் வேன் டைக்.
கத்தாருக்கு எதிரான தனது கடைசி 'ஏ' பிரிவு ஆட்டத்தில் வென்றால் நெதர்லாந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவது உறுதி.

