லுசாய்ல்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'எச்' பிரிவு ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் இன்று உருகுவேயைச் சந்திக்கிறது. கானாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் 37 வயது ரொனால்டோ. அதன் மூலம் ஐந்து உலகக் கிண்ணப் ேபாட்டிகளில் கோல் போட்ட முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
மற்றொரு வயதான நட்சத்திரமான 35 லயது லூயிஸ் சுவாரெஸைக் கொண்ட உருகுவேயை இன்று சந்திக்கிறது போர்ச்சுகல். அந்த ஆட்டத்தில் போர்ச்சுகலை வெல்லச் செய்து அணியை இரண்டாம் சுற்றுக்கு முன்னேற வைப்பது ரொனால்டோவின் இலக்கு. அண்மையில் பல சர்ச்சைகளுக்கு ஆளானபோதும் தனது ஆற்றலில் எந்தக் குறையும் ஏற்படவில்லை என்பதை ரொனால்டோ நிரூபிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, போர்ச்சுகலின் தற்காப்பு ஆட்டக்காரர் ெடனிலோ பெரேராவின் நெஞ்சு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. பயிற்சியின்போது அவர் காயமுற்றார். அதைத் தொடர்ந்து பெரேரா போட்டியில் இனி பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
முதல் உலகக் கிண்ணப் போட்டியில் கிண்ணத்தைக் கைப்பற்றிய உருகுவேயும் போர்ச்சுகலும் இன்று பின்னிரவு மூன்று மணிக்குச் சந்திக்கின்றன. ரொனால்டோ, சுவாரெஸ் நேருக்கு நேர்!
இன்றைய மற்றோர் 'எச்' பிரிவு ஆட்டத்தில் தென்கொரியாவும் கானாவும் சந்திக்கின்றன. ஆட்டத்தில் தென்கொரியா வென்றால் அந்த அணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும்.

