கத்தாரில் பூனையைத் தத்தெடுத்த வீரர்கள்

கத்தாரில் பூனையைத் தத்தெடுத்த வீரர்கள்

1 mins read
a31a5e7a-c301-4b74-b7f1-e1966fe75e67
-

தோஹா: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யில் வெற்றி வாகை சூடும் இங்­கி­லாந்­தின் கனவு கலைந்­தி­ருக்­க­லாம். ஆனால் ஓர் உயி­ருக்கு வாழ்வு கொடுத்த பாக்­கி­யம் கிடைத்­துள்­ளது அந்த அணி­யின் இரு வீரர்­க­ளுக்கு.

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான மான்­செஸ்­டர் சிட்­டி­யின் நட்­சத்­தி­ரங்­க­ள் கைல் வாக்­கர், ஜான் ஸ்டோன்ஸ் ஆகிய இரு­வ­ரும் கத்­தா­ரின் சாலை­களில் சுற்­றித் திரிந்த பூனை ஒன்­றைத் தங்­க­ளு­டன் இங்­கி­லாந்­துக்­குக் கொண்டு சென்­ற­னர். இப்­பூ­னைக்கு டேவ் என்று பெயர் சூட்­டி­யுள்­ளார் ஸ்டோன்ஸ்.

விலங்கு மருந்­த­கம் ஒன்­றில் டேவ் பரி­சோ­தனை­க­ள் மேற்கொளும். அதற்­குப் பிறகு நான்கு மாதங்­கள் தனி­மை­யில் இருக்கும். அதன் பின்­னர் தத்­துப் பெற்­றோ­ரான சிட்டி வீரர்களிடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­ம்.