மோசடி: நெய்மார் விடுவிப்பு

மோசடி: நெய்மார் விடுவிப்பு

1 mins read

மட்­ரிட்: பிரே­சில் காற்­பந்து நட்­சத்­தி­ரம் நெய்­மா­ரை­யும் பிர­தி­வாதி­கள் சில­ரை­யும் மோசடி, ஊழல் குற்­றச்­சாட்­டு­களிலிருந்­து ஸ்பெ­யின் நாட்டு நீதி­மன்­றம் நேற்று விடு­வித்­தது.

2013ல் சாந்­தோஸ் குழு­வி­ல் இ­ருந்து பார்­சி­லோ­னா­வுக்கு நெய்­மார் மாறி­ய­தன் தொடர்­பில் இந்த வழக்கு நடை­பெற்று வந்­தது.

பிரே­சி­லிய முத­லீட்டு நிறு­வ­ன­மான 'டிஐ­எஸ்' இந்த வழக்­கைத் தொடுத்­தி­ருந்­தது.

நெய்­மா­ருக்கு ஐந்து ஆண்டு சிறைத்­தண்­ட­னை­யும் மற்­ற­வர்­களுக்கு 149 மில்­லி­யன் யூரோ­வும் (S$212.7 மி.) அப­ரா­த­மும் விதிக்­கும்­படி டிஐ­எஸ் கேட்­டுக்­கொண்­டது.

கத்­தா­ரில் உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்டி தொடங்­கு­வ­தற்கு ஒரு மாதத்­திற்கு முன்பு, பார்­சி­லோ­னா­வில் நெய்­மா­ரின் வழக்கு தொடங்­கி­யது.

இவ்­வ­ழக்­கில் குற்­றம் புரிந்­த­தற்கு சான்று எது­வும் கிடைக்­க­வில்லை என்­ப­தால், பிர­தி­வா­தி­கள் அனை­வ­ரை­யும் விடு­விக்­கு­மாறு பார்­சி­லோனா நீதி­மன்­றத்­தி­டம் அர­சாங்­கத் தரப்பு வழக்­க­றி­ஞர் முன்­ன­தா­கக் கேட்­டுக் கொண்­டார்.