சரிவை மீட்ட இந்திய இணை

சரிவை மீட்ட இந்திய இணை

2 mins read

சட்­டோ­கி­ராம்: சேத்­தேஸ்­வர் புஜா­ரா­வும் ஷ்ரே­யாஸ் ஐய­ரும் பொறுப்­பாக ஆடி ஓட்­டங்களைச் சேர்க்க, பங்­ளா­தேஷ் அணிக்­கெ­தி­ரான முதல் டெஸ்ட் போட்­டி­யின் முதல் இன்­னிங்­சில் இந்­திய கிரிக்­கெட் அணி சரி­வி­லி­ருந்து மீண்­டது.

பங்­ளா­தேஷ் சுற்­றுப்­ப­ய­ணம் சென்­றுள்ள இந்­திய அணி, அந்­நாட்டு அணிக்­கெ­தி­ரான ஒரு­நாள் போட்­டித் தொட­ரில் 2-1 என்ற கணக்­கில் தோற்று அதிர்ச்­சி­ அளித்­தது.

அதனைத் தொடர்ந்து, அவ்­விரு அணி­க­ளுக்கு இடை­யி­லான இரண்டு போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்­கி­யது.

ரோகித் சர்மா இல்­லாத நிலை­யில் கே.எல்.ராகுல் இந்­திய அணித்­த­லை­வ­ரா­கப் பொறுப்­பேற்­றார். அக்­சர் பட்­டேல், அஸ்­வின், குல்­தீப் யாதவ் ஆகிய மூன்று சுழல் பந்­து­வீச்­சா­ளர்­க­ளு­ட­னும் உமேஷ் யாதவ், முகம்­மது சிராஜ் என இரண்டு வேகப் பந்­து­வீச்­சா­ளர்­க­ளு­ட­னும் இந்­தியா கள­ம் கண்டது.

பூவா தலை­யா­வில் வென்று முத­லில் பந்­த­டித்த இந்­திய அணி முதல் ஆட்ட வேளை­யி­லேயே ராகுல் (22), ஷுப்­மன் கில் (20), விராத் கோஹ்லி (1) என மூன்று விக்­கெட்­டு­களை இழந்­தது.

அதன்­பின் 4வது விக்­கெட்­டுக்கு புஜா­ரா­வு­டன் இணைந்த ரிஷப் பன்ட் அதி­ர­டி­யாக ஆடி­னார். இரு­வ­ரும் சேர்ந்து 64 ஓட்டங்­களை எடுத்­த­னர். அதில் பன்டின் பங்கு 46 ஓட்­டங்­கள்.

புஜாரா 90 ஓட்­டங்­களில் ஆட்­ட­மி­ழந்­து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். முதல் நாளின் கடைசி பந்­தில் அக்­சர் (14) தனது விக்­கெட்டைப் பறிகொடுத்தார்.

முதல் நாள் முடி­வில் இந்­திய அணி 6 விக்­கெட் இழப்­பிற்கு 278 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. ஷ்ரே­யாஸ் 82 ஓட்­டங்­க­ளு­டன் களத்­தி­ல் இருக்கிறார்.