லுசாய்ல்: நாளை அரங்கேறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி இறுதியாட்டத்தின் நடுவராக போலந்தைச் சேர்ந்த சிமோன் மார்சினியாக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இறுதியாட்டத்தில் அர்ஜென்டினாவும் பிரான்சும் மோதவுள்ளன. ஏற்கெனவே போட்டியில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு ஆட்டங்களில் நடுவராக இருந்திருக்கிறார் 41 வயது மார்சினியாக்.
இரண்டாம் சுற்றில் ஆஸ்திரேலியாவும் அர்ஜென்டினாவும் மோதிய ஆட்டம், முதல் சுற்றில் பிரான்சும் டென்மார்க்கும் மோதிய ஆட்டம் ஆகிய இரண்டிலும் இவர் நடுவராக இருந்திருக்கிறார்.
இறுதியாட்டத்தில் இவருடன் பணியாற்றவுள்ள துணை நடுவர்களும் போலந்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் ஏற்கெனவே யூரோ 2016 உள்ளிட்ட போட்டிகளில் நடுவர்களாக இருந்தவர்கள்.

