மறைந்த ஜாம்பவானின் நினைவுகளில் ஆறுதல்கொள்ளும் ரசிகர்கள்

மறைந்த ஜாம்பவானின் நினைவுகளில் ஆறுதல்கொள்ளும் ரசிகர்கள்

2 mins read
17e0408a-c76d-4d68-9e61-d36af658cc05
-
multi-img1 of 2

காற்­பந்து சகாப்­த­மும் பிரே­சிலின் முன்­னாள் நட்­சத்­திர வீர­ரு­மான பெலே நேற்று முன்­தி­னம் கால­மா­னார். அவ­ருக்கு 82 வயது.

சிறு­நீ­ர­கப் பிரச்­சினை, பெருங்கு­டல் புற்­று­நோய் ஆகி­யவற்றுக்காக அவர் சிகிச்சை பெற்று வந்­தார்.

பெலே­யின் இறப்பு உல­கெங்­கும் உள்ள காற்­பந்து ரசி­கர்­களை மீளாத் துய­ரில் ஆழ்த்­தி­உள்­ளது.

1958ஆம் ஆண்­டில் பிரே­சில் முதன்­மு­றை­யாக உல­கக் கிண்­ணத்தை ஏந்­தி­யது. அதற்கு முக்­கிய கார­ண­மாக பெலே இருந்­தார். நான்கு ஆட்­டங்­களில் அவர் ஆறு கோல்­கள் போட்­டார்.அப்­போது அவ­ருக்கு 17 வயது.

மூன்று முறை உல­கக் கிண்­ணம் வென்ற ஒரே விளை­யாட்­டா­ளர் எனும் பெருமை அவ­ரைச் சேரும். பெலே மொத்­தம் 1,279 கோல்­கள் போட்­டி­ருப்­ப­தாக கின்­னஸ் உல­கச் சாதனை தெரி­விக்­கிறது. 1995ஆம் ஆண்­டில் பிரே­சி­லின் விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ராக அவர் நிய­மிக்­கப்­பட்­டார். அவ­ரைக் கௌர­வப்­

ப­டுத்­தும் வகை­யில் பிரே­சி­லில் நவம்­பர் 19 பெலே தின­மாக அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, பெலே­யின் மர­ணத்­துக்கு முன்­னாள், இந்­நாள் காற்­பந்து நட்­சத்­தி­ரங்­கள், உல­கத் தலை­வர்­கள், பிர­ப­லங்­கள் எனப் பல­ர் தங்­கள் ஆழ்ந்த அனு­தா­பங்­க­ளைத் தெரி­வித்துக்­கொண்­ட­னர். அவரது அபார ஆட்டத்தைத் தொலைக்­காட்­சி­யிலும் நேரிலும் பலர் கண்டு மகிழ்ந்தனர். இந்த நினைவுகள் வாழ்­நாள் முழுவதும் தங்கள் மனதைவிட்டு நீங்காது என்று உல­கெங்­கும் உள்ள

அவ­ரது ரசி­கர்­கள் கூறுகின்றனர்.

பெலே சிங்­கப்­பூ­ருக்கு ஐந்து முறை வந்­துள்­ளார்.

மூன்­றா­வது முறை­யாக

உல­கக் கிண்­ணத்தை வென்று, நான்கு ஆண்­டு­கள் கழித்து, 1974ஆம் ஆண்­டில் அவர் முதன்­மு­றை­யா­கச் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். குளிர்­பா­ன உற்பத்தி நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ள­ரும் செல்­வந்­

த­ரு­மான இயோ யாப் செங்­கின் ஏற்­பாட்­டில் ஆசி­யா­வில் நடை­பெற்ற காற்­பந்­துச் சுற்­றுப்­ப­ய­ணத்­தில் பெலே கலந்­து­கொண்­டார். அப்­போது சிங்­கப்­பூ­ரில் அவர் மூன்று நாள் தங்கி உள்­ளூர் காற்­பந்து வீரர்­க­ளுக்­குப் பயிற்சி அளித்­தார்.

1979ஆம் ஆண்­டில் தேசிய விளை­யாட்­ட­ரங்­கில் சிங்­கப்­பூர் காற்­பந்­துக் குழு­வு­டன் நியூ­யார்க் காஸ்­மோஸ் குழு நட்­பு­முறை ஆட்­டத்­தில் மோதி­யது. நியூ­யார்க் காஸ்­மோஸ் குழு­வில் இருந்த பெலே சிங்­கப்­பூர் வந்­தி­ருந்­தார். ஆனால் காயம் கார­ண­மாக அவ­ரால் கள­மி­றங்க முடி­யாத நிலை ஏற்­பட்­ட­தால் உள்­ளூர் ரசி­கர்­கள் ஏமாற்­றம் அடைந்­த­னர். அந்த ஆட்­டத்­தில் காஸ்­மோஸ் அணி 4-1 எனும் கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது.

அடுத்து அவர் 2001ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொண்­டார். எஸ்-லீக் ரசி­கர் விழா­வில் அவர் கலந்­து­கொண்­டார். 2006ஆம் ஆண்­டில் அவர் மீண்­டும் சிங்­கப்­பூ­ருக்கு வந்து சிங்­கப்­பூர் விளை­யாட்­டுப் பள்­ளி­யைச் சேர்ந்த இளம் உள்­ளூர் காற்­பந்து, வலைப்­பந்து வீரர்­க­ளைச் சந்­தித்­தார்.

2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தில் அவர் மீண்­டும் சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். அதுவே சிங்­கப்­பூ­ருக்கு அவர் மேற்­கொண்ட கடைசி பய­ணம். அவ­ரு­டன் பிரெஞ்சு நட்­சத்­திர வீரர் எரிக் கேன்­டோ­னா­வும் அமெ­ரிக்க நட்­சத்­திர வீரர் கோபி ஜோன்­சும் வந்­த­னர். எஸ்-லீக் ஆட்டத்தைக் கண்டு களித்தது மட்டுமல்லாது, சிங்கப்பூர் விளை யாட்டுப் பள்ளி மாணவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.