உலகக் கிண்ண காற்பந்து இறுதி ஆட்டத்தின்போது அர்ஜென்டினா காற்பந்து குழுவின் ஆட்டக்காரர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து ஃபிஃபா எனப்படும் அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பு விசாரணை தொடங்கியுள்ளது.
கத்தாரில் நடந்த போட்டியில் பெனால்டி வாய்ப்புகளில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வென்றது.
ஆட்டத்தின்போதும், ஆட்டம் முடிவடைந்ததும் அர்ஜென்டினா அணியின் ஆட்டக்காரர்கள் சில விதிமுறைகளை மீறியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறிப்பாக அர்ஜென்டினாவின் கோல் பாதுகாவலர் எமி மார்டினெஸ் தங்க உறை விருதை வென்ற பின்னர் மரியாதைகுறைவான செயல் செய்தார். ஆட்டம் முடிவடைந்ததும், பிரான்ஸ் அணியின் கிலியோன் எம்பாப்பேவின் மறைவுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அவர் வேடிக்கைக்காகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் கொண்டாட்ட ஊர்வலத்தில் ஒரு பொம்மையை அவர் பிடித்திருந்தார். பொம்மையின் முகத்துக்கு பதிலாக அதில் பிரான்ஸ் அணியின் கிலியோன் எம்பாப்பேவின் முகம் இருந்தது.
மார்டினெசின் செயல்கள் சமூக ஊடகத் தளங்களில் பரவலாக பகிரப்பட்டன. அவற்றை மில்லியன் கணக்கானோர் பார்த்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அர்ஜென்டினா அணிக்கு கணிசமான அபராதம் விதிக்கப்படலாம்.