அர்ஜென்டினா காற்பந்து குழுவிற்கு எதிராக ஃபிஃபா விசாரணை 

உலகக் கிண்ண காற்பந்து இறுதி ஆட்டத்தின்போது அர்ஜென்டினா காற்பந்து குழுவின் ஆட்டக்காரர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து ஃபிஃபா எனப்படும் அனைத்­து­ல­கக் காற்­பந்­துக் கூட்­ட­மைப்பு விசாரணை தொடங்கியுள்ளது. 

கத்தாரில் நடந்த போட்டியில் பெனால்டி வாய்ப்புகளில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வென்றது.

ஆட்டத்தின்போதும், ஆட்டம் முடிவடைந்ததும் அர்ஜென்டினா அணியின் ஆட்டக்காரர்கள் சில விதிமுறைகளை மீறியிருக்கலாம் என நம்பப்படுகிறது. 

குறிப்பாக அர்ஜென்டினாவின் கோல் பாதுகாவலர் எமி மார்டினெஸ் தங்க உறை விருதை வென்ற பின்னர் மரியாதைகுறைவான செயல் செய்தார். ஆட்டம் முடிவடைந்ததும், பிரான்ஸ் அணியின் கிலியோன் எம்பாப்பேவின் மறைவுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அவர் வேடிக்கைக்காகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் கொண்டாட்ட ஊர்வலத்தில் ஒரு பொம்மையை அவர் பிடித்திருந்தார். பொம்மையின் முகத்துக்கு பதிலாக அதில் பிரான்ஸ் அணியின் கிலியோன் எம்பாப்பேவின் முகம் இருந்தது. 

மார்டினெசின் செயல்கள் சமூக ஊடகத் தளங்களில் பரவலாக பகிரப்பட்டன. அவற்றை மில்லியன் கணக்கானோர் பார்த்துள்ளனர். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அர்ஜென்டினா அணிக்கு கணிசமான அபராதம் விதிக்கப்படலாம். 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!