லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ண காற்பந்துப் போட்டியின் ஐந்தாவது சுற்றுக்கு மான்செஸ்டர் சிட்டி தகுதி பெற்றுள்ளது.
ஆர்சனலுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தை அது 1-0 எனும் கோல் கணத்தில் கைப்பற்றியது. சிட்டியின் வெற்றி கோலை நேதன் அக்கே போட்டார். கோல் போட கிடைத்த வாய்ப்புகளைத் தமது குழு பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று ஆர்சனலின் நிர்வாகி மிக்கேல் ஆர்டேட்டா அதிருப்தி தெரிவித்தார்.
"இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் பலம் பொருந்திய பல குழுக்களை ஆர்சனல் இப்
பருவத்தில் தோற்கடித்துள்ளது. கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தியதே வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. ஆனால் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனல் ஆட்டக்காரர்கள் வாய்ப்புகளை நழுவவிட்டனர்," என்றார் ஆர்டேட்டா.
இந்நிலையில், நான்காவது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றபோதிலும் சிட்டியின் செயல்
பாடும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதன் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் கோல் போடாதபடி ஆர்சனலின் தற்காப்பு அரண் பார்த்துக்கொண்டது.
ஒரு கட்டத்தில் ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடியக்கூடும் என்று தோன்றியது.
ஆட்டம் முடிய 26 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது மாற்று ஆட்டக்காரராக சிட்டியின் ஜுலியன் ஆல்வரேஸ் களமிறங்கி னார்.
அவரது வருகை ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
ஆல்வரேஸ் அனுப்பிய பந்து ஆர்சனலின் கோல் கம்பம் மீது பட்டு ஜேக் கிரீலிஷிடம் சென்றது. அவர் அக்கேயிடம் பந்தை அனுப்ப, பந்து வலையைத் தொட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆர்சனலால் இறுதி வரை ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போனதால் சிட்டி வெற்றி பெற்றது. எஃப்ஏ கிண்ணப் போட்டியிலிருந்து ஆர்சனல் வெளியேறியது.

