லசாஞ்சே: உருகுவே காற்பந்து அணியின் நான்கு வீரர்களுக்கு அனைத்துலக காற்பந்துச் சம்மேளனமான ஃபிஃபா தற்காலிகத் தடை விதித்துள்ளது.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தின்போது கானாவுடன் மோதிய உருகுவே 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது.
மூன்று கோல்கள் முன்னிலையில் வென்றிருந்தால், உருகுவே அணிக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பிருந்தது. ஆனால், கடைசி வரை போராடிய உருகுவே வீரர்களுக்குப் பலன் கிட்டவில்லை.
ஆட்ட முடிவில் உருகுவே வீரர்கள் சிலர் நடுவரிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில், ஜோசே மரியாவிற்கும் கோல்காப்பாளர் ஃபெர்னான்டோ மஸ்லேராவுக்கும் நான்கு ஆட்டங்கள் தடையும் 20,000 சுவிஸ் ஃபிராங்க் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
எடின்சன் கவானி, டியேகோ கோடினுக்கு ஓர் ஆட்டம் தடையும் 15,000 சுவிஸ் ஃபிராங்க் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. சமூக சேவை செய்யவும் இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உருகுவே காற்பந்துச் சம்மேளனத்திற்கு 50,000 சுவிஸ் ஃபிராங்க் (S$70,248) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

