ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதபாத்தில் நடைபெற்றுவரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து, 289 ஓட்டங்களை எடுத்துள்ளது. இளம் விளையாட்டாளர் ஷுப்மன் கில்லும் விராத் கோஹ்லியும் பந்தபடிப்பில் அசத்தினர்.
டெஸ்ட் போட்டிகளில் தமது இரண்டாவது சதத்தை அடித்து, இந்திய அணிக்கு ஓட்டங்களைக் குவித்தார் கில். பின்னர் மேத்தியூ குன்ஹமன் வீசிய பந்தால் 128 ஓட்டங்களில் அவர் ஆட்டம்இழந்தார்.
அவருக்குப் பிறகு களமிறங்கிய கோஹ்லி, 59 ஓட்டங்கள் அடித்து களத்தில் உள்ளார்.
அவருடன் கூட்டுசேர்ந்த ரவீந்திர ஜடேஜா, 16 ஓட்டங்களும் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.
நேற்றைய ஆட்டத்தின் முடிவில், மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ஓட்டங்களை எடுத்த இந்திய அணி இலக்கை அடைய 191 ஓட்டங்கள் மட்டுமே உள்ளன.
முதல் இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 480 ஓட்டங்களை எடுத்திருந்தது.