லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற்பந்துத் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் மேன்யூ இன்று பின்னிரவு ஃபுல்ஹம்மை எதிர்கொள்ளவுள்ள நிலையில், நியூகாசலை வீழ்த்தி லீக் கிண்ணத்தை வென்றது தமது குழுவிற்கு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று சொன்னார் மான்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகி எரிக் டென் ஹாக்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு லீக் கிண்ணத்தை வென்றது மேலும் பல வெற்றிக் கிண்ணங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை மேன்யூவிடம் தூண்டியுள்ளதாக அவர் சொன்னார்.
வியாழக்கிழமை நடைபெற்ற யூரோப்பா லீக் தொடரில் மேன்யூவின் மார்கஸ் ரேஷ்ஃபர்ட் போட்ட வெற்றி கோலைத் தொடர்ந்து, காலிறுதிச் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது மேன்யூ.
“ரேஷ்ஃபர்ட்டின் மேம்பட்ட ஆட்டத்திறன் அவருக்கு அதிக கோல்களையும் குழுவிற்கு அதிக வெற்றிகளையும் தருகிறது,” என்றார் ஹாக்.
சிங்கப்பூர் நேரப்படி இன்று பின்னிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ள நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில், நான்கு ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ள கேசமிரோ விளையாடமாட்டார்.
ஆண்டனி மார்சியால், ஆண்டனி ஆகிய இருவரும் காயமடைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம்.
காயத்தில் இருந்து மீண்டுள்ள கிறிஸ்டியன் எரிக்சன் இன்று களமிறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.