மூன்றாம் முறையாக புதிய சாதனையுடன் சாதித்த சாந்தி

1 mins read

பிரிஸ்­பன்: ஆஸ்­தி­ரே­லி­யப் பொதுவிருது திடல்­தடப் போட்டி­களில் 100 மீட்­டர் ஓட்­டப் பந்­த­யத்­தில் சிங்­கப்­பூ­ரின் சாந்தி பெரேரா வாகை சூடி­னார்.

இறு­திச் சுற்­றில் அவர் புதிய தேசிய சாத­னை­யை­யும் படைத்­தார். பந்­த­யத்தை முடிக்க அவர் 11.37 நொடி­க­ளை மட்டுமே எடுத்­துக் கொண்­டார்.

முன்­ன­தாக, பிரிஸ்பன் நகரில் நடந்த இதே போட்­டி­யின் தகு­திச் சுற்­றில் 11.38 நொடி­களில் நூறு மீட்­டரை ஓடிக் கடந்­தார் சாந்தி.

ஒரே மாதத்­தில் மும்­முறை அவர் தமது சொந்த தேசிய சாத­னையை முறி­ய­டித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

மார்ச் 3ஆம் தேதி நியூ­சி­லாந்­தில் நடந்த திடல்­த­டப் போட்­டி­களில் 11.46 நொடி­களில் அவர் 100 மீ. பந்­த­யத்தை முடித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், மீண்­டும் புதிய சாதனை படைப்­பேன் எனத் தான் எதிர்­பார்க்­க­வில்லை என்ற அவர், நேற்­றுக் காலை நடந்த அரை­யி­று­திச் சுற்­றி­லும் 11.58 நொடி­களில் முத­லி­டம் பிடித்­தார்.

"வெற்றி மேடையை அலங்­கரிக்க வேண்­டும் என்று இலக்கு கொண்­டி­ருந்­தேன். அதி­லும் தங்­கம் வெல்ல முடிந்­த­தில் மிகுந்த மகிழ்ச்சி," என்­றார் 26 வய­தான சாந்தி.

அடுத்­த­தாக ஆஸ்திரேலியப் பொதுவிருதில் தமக்­குப் பிடித்­த­மான 200 மீ. ஓட்­டத்­தில் அவர் கலந்­து­கொள்­ள­வி­ருக்­கி­றார். அப்போட்டிகள் இன்று இடம் பெறவிருக்கின்றன.

கடந்த வாரம் பிரிஸ்­ப­னில் நடந்த இன்­னொரு போட்­டி­யில் 200 மீட்­டரை 23.16 நொடி­களில் கடந்து அவர் புதிய தேசிய சாதனை படைத்­தி­ருந்­தார்.