பந்தடிப்பாளர்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறார்

1 mins read
9ae559fe-8b53-471d-b711-0570921962d6
-

அக­ம­தா­பாத்: குஜ­ராத் டைட்­டன்ஸ் அணிக்­கெ­தி­ரான முதல் ஆட்­டத்­தில் மதிக்­கத்­தக்க ஓட்­டங்­க­ளைக் குவித்­த­போ­தும் தமது அணி பந்­த­டிப்­பா­ளர்­க­ளி­டம் இருந்து இன்­னும் எதிர்­பார்ப்­ப­தாகக் கூறி­யுள்­ளார் சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி­யின் தலை­வர் மகேந்­திர சிங் டோனி.

இவ்­வாண்­டிற்­கான இந்­திய பிரி­மி­யர் லீக் (ஐபி­எல்) டி20 கிரிக்­கெட் தொடர் நேற்று முன்­தினம் தொடங்­கியது. முதல் போட்­டி­யில் நடப்பு வெற்­றி­யா­ள­ரான குஜ­ராத் அணி­யி­டம் சென்னை அணி ஐந்து விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் தோற்­றுப்­போ­னது.

முத­லில் பந்­த­டித்த சென்னை அணி 20 ஓவர்­களில் ஏழு விக்­கெட் இழப்­பிற்கு 178 ஓட்­டங்­களை எடுத்­தது. நான்கு பந்­து­கள் எஞ்­சிய நிலை­யில், இலக்கை விரட்டி வெற்றிபெற்றது குஜ­ராத் அணி.

போட்­டிக்­குப்­பின் பேசிய டோனி, "இர­வில் பனி­பெய்­யும் என்­பது தெரி­யும். அத­னால் இன்­னும் சற்று அதி­க­மாக ஓட்­டம் சேர்த்­தி­ருக்­க­லாம். ருது­ராஜ் கெய்க்­வாட் (92 ஓட்­டங்­கள்) மிகச் சிறப்­பாக ஆடி­னார். இளம் வீரர்­கள் முன்­வந்து பொறுப்­பு­டன் விளை­யா­டு­வது மிக முக்­கி­யம் என நினைக்­கி­றேன்," என்று சொன்­னார்.

அறிமுக ஐபிஎல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கரை டோனி பாராட்டினார்.

அடுத்ததாக நாளை திங்கட்கிழமை இரவு சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் நடக்கவுள்ள போட்டியில் சென்னை அணி, லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியை எதிர்த்தாடவிருக்கிறது.