மொகாலி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொகாலியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜயண்ட்சை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. பூவா தலையா வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பந்தடித்த லக்னோ வீரர்கள் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர்.
லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் என்ற பெரும் எண்ணிக்கையை எட்டியது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஓட்டம் எடுத்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது லக்னோ.
அந்த அணியின் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் 72 ஓட்டங்கள் விளாசினர்.
கைல் மேயர்ஸ் அரை சதம் கடந்து, 54 ஓட்டங்கள் சேர்த்தார். நிக்கலஸ் பூரன், 19 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ஓட்டங்களும் ஆயுஷ் பதோனி 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 258 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.
அணித் தலைவர் ஷிகர் தவான் ஓர் ஓட்டத்தில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து வந்த பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதர்வா தைடே அதிரடியாக ஆடினார். அவர் 36 பந்தில் 2 சிக்சர், 8 பவுண்டரி உட்பட 66 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
இறுதியில், பஞ்சாப் அணி 201 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே, 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வென்றது.

