நடால் இல்லையெனில் பெருத்த அடியாக இருக்கும்: ஃபெடரர்

நடால் இல்லையெனில் பெருத்த அடியாக இருக்கும்: ஃபெடரர்

1 mins read
Google News Preferred Icon

பாரிஸ்: இம்­மா­தம் 22ஆம் தேதி பாரி­சில் தொடங்­க­வி­ருக்­கும் பிரெஞ்­சுப் பொது விருது டென்­னிஸ் போட்­டி­யில் 14 முறை வெற்­றி­யா­ள­ரான ரஃபாயல் நடால் பங்­கேற்­ப­தில் கேள்­விக்­குறி நில­வு­கிறது.

கடந்த ஜன­வ­ரி­யில் ஆஸ்­திரே­லி­யப் பொது விரு­தின்­போது நடால் காய­ம­டைந்த நிலை­யில், அதி­லி­ருந்து இன்­னும் அவர் முழு­மை­யா­கக் குண­ம­டை­ய­வில்லை.

இந்­நி­லை­யில், "பிரெஞ்­சுப் பொது விரு­துப் போட்­டி­யில் நடால் பங்­கேற்க முடி­யா­மல் போனால் அது பெருத்த அடி­யாக இருக்­கும்,' என்று முன்­னாள் டென்­னிஸ் நட்­சத்­தி­ரம் ரோஜர் ஃபெடரர் கருத்­து­ரைத்­துள்­ளார். ஆயி­னும், அதற்­கு­முன் நடால் உடல்­நிலை தேறி­வி­டு­வார் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

கடந்த வாரம் மட்­ரிட்­டில் நடந்த போட்­டி­யி­லும் அதற்­கு­முன் இண்­டி­யன் வெல்ஸ், மயாமி, மான்டி கார்லோ ஆகிய இடங்­களில் நடந்த போட்­டி­க­ளி­லும் நடால் பங்­கேற்­க­வில்லை.