நோம்பென்: கம்போடியாவில் நடைபெற்று வரும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் ஆண்கள் கிரிக்கெட் அணி வெண்கலம் வென்றுள்ளது.
நேற்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் அது இந்தோனீசியாவை எதிர்கொண்டது. முதலில் பந்தடித்த சிங்கப்பூர் அணி 162 ஓட்டங்களைக் குவித்தது.
அடுத்து களமிறங்கிய இந்தோனீசியா 147 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிங்கப்பூர் அணி வாகை சூடியது.