மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் நடப்பு வெற்றியாளரான குஜராத் டைட்டன்சும் நேற்று முன்தினம் மோதியது.
குஜராத் முதலில் பந்துவீசியது. அதன்படி மும்பை அணி முதலில் பந்தடித்தது.
அணித் தலைவர் ரோகித் சர்மா 18 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 20வது ஓவரின் கடைசி பந்தில் சதம் அடித்தார். இவர் 49 பந்துகளில் 103 ஓட்டங்கள் எடுத்தார்.
மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ஓட்டங்கள் எடுத்தது. குஜராத் 191 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை வென்றது.