ஜெய்ப்பூர்: சொந்த மண்ணில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை மோசமான தோல்வியைச் சந்தித்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயித்த 172 ஓட்டங்களை எட்ட முடியாமல் 59 ஓட்டங்களிலேயே அந்த அணி சுருண்டது. இது, ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை.
ராஜஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து வேகமாக வெளியேறியதால் 10.3வது ஓவரிலேயே ஆட்டம் முடிவுற்றது. பஞ்சாப் வென்றாலும் அதன் வீரர் தினேஷ் கார்த்திக் மோசமான சாதனையில் ரோகித் சர்மாவுடன் இணைந்தார். 16 முறை ‘டக்அவுட்’ ஆன ஒரே வீரர் ரோகித் சர்மா என்று இருந்த நிலையில் நேற்று முன்தினம் தினேஷும் 16வது முறை ‘டக் அவுட்’ ஆனார்.
ஷிம்ரன் ஹேட்மயர் மட்டும் தனி ஆளாகப் போராடி 19 பந்துகளில் 4 சிக்சர் அடித்து 35 ஓட்டங்களை எடுத்ததால் ராஜஸ்தான் அணியின் கௌரவம் ஓரளவு தப்பியது.
முதல் ஐந்து ஆட்டங்களில் நான்கில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி இப்போது தொடர் தோல்விகளால் தத்தளித்துக் கொண்டுள்ளது. கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் ராஜஸ்தான் இரண்டில் மட்டுமே வென்றது. 12 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்திலிருக்கும் அந்த அணிக்கு இன்னும் ஓர் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. தர்மசாலாவில் நடக்கும் வாழ்வா சாவா ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் அது மோதுகிறது.