ஐபிஎல்: பிளேஆஃப் சுற்றில் சென்னை, லக்னோ

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட்டின் பிளேஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய குழுக்கள் தகுதிபெற்றுள்ளன.

டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான ஆட்டத்தில் 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது சென்னை.

அதைத் தொடர்ந்து ஐபிஎல் பட்டியலில் சென்னை இரண்டாம் இடத்தில் முடிப்பது உறுதியானது.

முதலில் பந்தடித்த சென்னை மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ஓட்டங்களைக் குவித்தது.

அதற்குப் பிறகு டெல்லி ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

கோல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வென்றது லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ். 

முதலில் பந்தடித்த லக்னோ எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்களை எடுத்தது.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நூலிழையில் எட்டத் தவறியது கோல்கத்தா.

ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு கோல்கத்தா 175 ஓட்டங்களை எடுத்தது.

பட்டியலில் லக்னோ மூன்றாவது இடத்தைப் பிடிப்பது உறுதியானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!