20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் நியூகாசல்

நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான நியூகாசல் யுனைடெட் 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

பிரிமியர் லீக்கில் லெஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் நியூகாசல் கோலின்றி சமநிலை கண்டது.

அதைத் தொடர்ந்து லீக் பட்டியலில் நியூகாசல் முதல் நான்கு இடங்களுக்குள் வருவது உறுதியானது.

பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வரும் குழுக்கள் அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் போட்டியிடும்.

புதிய உரிமையாளர்களின் தலைமையில் மேன்மேலும் உயர்ந்து வந்துள்ளது நியூகாசல்.

நிர்வாகி எடி ஹாவும் குழுவை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!