விசாகப்பட்டினம்: ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலும் மக்களவைத் தேர்தலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளன. அதனால், அரசியல் கட்சிகள் பிரபலங்களை வளைத்துப் போடுவதில் தீவிரம் காட்டுகின்றன.
அந்த வகையில் அண்மையில் ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடுவுக்கு காங்கிரஸ், பாஜக அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரசால் ஈர்க்கப்படுவதுபோலத் தெரிகிறது. சென்னை சூப்பங் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த அவர், அந்த அணி 5வது முறை ஐபிஎல் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்த அம்பதி ராயுடு (படம்) ஐபிஎல் கிண்ணத்தை அவரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இச்செய்தி வெளியானதும் அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைவார் என்று பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.
அதற்கு முக்கிய காரணம் அவரது உறவினர் அம்பதி ராம்பாபு, ஜெகன் மோகன் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது.
இருப்பினும், தமது அரசியல் பிரவேச முடிவை அம்பதி ராயுடு இன்னமும் வெளி யிடவில்லை.