லண்டன்: பிரிமியர் லீக்கிலிருந்து இறக்கப்பட்ட லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு தனது புதிய நிர்வாகியாக மான்செஸ்டர் சிட்டியின் முன்னாள் துணை பயிற்றுவிப்பாளரான என்ஸோ மரேஸ்காவை (படம்) நியமித்துள்ளது.
அடுத்த காற்பந்துப் பருவத்தில் சாம்பியன்ஷிப் லீக்கில் சிறப்பாக விளையாடி மீண்டும் பிரிமியர் லீக்கில் இடம்பிடிக்க அக்குழு இப்போதே முயற்சி எடுக்க தொடங்கிவிட்டது.
43 வயது இத்தாலியரான மரேஸ்காவின் ஒப்பந்தம் 2026 வரை நீடிக்கிறது. அவர் தற்போதைய நிர்வாகி டீன் ஸ்மித்துக்குப் பதிலாக வருகிறார்.
“இக்குழுவை உயர்ந்தநிலைக்குக் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறேன்,” என்றார் மரேஸ்கா.
“நாங்கள் எதிர்பார்க்கும் திறமைகளைக் கொண்டுள்ளார் மரேஸ்கா,” என்றார் லெஸ்டர் சிட்டி காற்பந்துச் சங்கத்தின் உரிமையாளர் அய்யாவாத் ஸ்ரீவதனபிரபா.