லிஸ்பன்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஆக அதிக முறை வாகை சூடியிருக்கும் பிரேசிலை எதிர்பாரா விதமாக வென்றுள்ளது ஆப்பிரிக்க அணியான செனகல்.
4-2 எனும் கோல் கணக்கில் செனகல் வென்றது.
11வது நிமிடத்தில் முன்னுக்குச் சென்றது பிரேசில்.
அதற்குப் பிறகு 55வது நிமிடத்துக்குள் செனகல் 3-1 எனும் கோல் கணக்கில் முன்னணி வகித்தது.
58வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கை 3-2 ஆனது.
எனினும், ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி வெற்றியை உறுதிப்படுத்தியது செனகல்.
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற இந்த நட்புமுறை ஆட்டத்தில் செனகலுக்கு இரண்டு கோல்களைப் போட்டார் முன்னாள் லிவர்பூல் நட்சத்திரம் சாடியோ மானே.

