பெங்களூரு: தெற்காசிய காற்பந்துச் சம்மேள வெற்றியாளர் காற்பந்து ஆட்டத்தில் புதன்கிழமை பாகிஸ்தானை இந்தியா 4-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்திய அணித் தலைவர் சுனில் செத்ரி அடித்த ‘ஹாட்ரிக்’ கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
ஆனால், பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டங்களில் மோதல் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்திலும் இரு அணிகளுக்கும் இடையே மோதலுக்கு குறைவில்லை.
இரு அணி ஆட்டக்காரர்களுக்கு இடையே மட்டுமின்றி அணி பயிற்றுவிப்பாளர்களும் மோதலில் ஈடுபடும் அளவிற்கு ஆட்ட நிலவரம் மோசமடைந்தது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி பயிற்றுவிப்பாளர் இகர் ஸ்டிமேக்கிற்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆனால் ஆட்ட நடுவர்கள் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டதைத் தொடர்ந்து ஆட்டம் தொடர்ந்தது.
இந்திய அணி அடுத்ததாக நேப்பாளத்துக்கு எதிராக சனிக்கிழமை விளையாடுகிறது.