ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்பு

புதுடெல்லி: இவ்வாண்டு நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உச்சநிலைக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீனாவின் ஹாங்ஜோ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கவுள்ளன.

ஆடவர்க்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 28ஆம் தேதியும் மகளிர்க்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.

இதற்குமுன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மும்முறையே கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது. கடைசியாக தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் 2014ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றது.

இவ்வாண்டு அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் இந்திய அணியே தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!