‘நான் பலியாடாக ஆக்கப்பட்டேன்’

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்திற்காக களமிறங்கிய குழுவிலிருந்து தாம் கைவிடப்பட்ட விவகாரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர் ஜேடன் சாஞ்சோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

பயிற்சியின்போது அவர் சரியாகச் செயல்படாததால் அவர் இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படவில்லை என்று யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக் கூறினார். ஆனால், நியாயமின்றி தாம் பலியாடாக ஆக்கப்பட்டதாக 23 வயது சாஞ்சோ வேதனையுடன் கூறினார்.

ஆர்சனல்-யுனைடெட் ஆட்டத்தில் சாஞ்சோ இடம்பெறாதது ரசிகர்கள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தத் தோல்வியின் காரணமாக லீக் பட்டியலில் 11வது இடத்துக்கு யுனைடெட் சரிந்தது.

2021ல் யுனைடெட்டில் சேர்ந்ததிலிருந்து 58 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள சாஞ்சோ, பயிற்றுவிப்பாளர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் தாம் மதிப்பதாகக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!