லண்டன்: நெருக்குதல் அளிக்கும் விதத்தில் அதிக காற்பந்து ஆட்டங்கள் இடம்பெறவிருப்பதால் விளையாட்டாளர்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று இங்கிலாந்தின் நிபுணத்துவ காற்பந்து வீரர்கள் சங்கத்தின் (பிஎஃப்ஏ) தலைமை நிர்வாக அதிகாரி மஹேட்டா மொலாங்கோ தெரிவித்துள்ளார்.
2024-25 பருவத்தில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் போட்டியிடும் குழுக்கள் கூடுதல் ஆட்டங்களில் விளையாடும். அதனால் தங்கள் விளையாட்டாளர்கள் பாதிக்கப்படக்கூடும் என்று பல இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுக்களின் நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்து வந்துள்ளனர்.

