தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்டன் வில்லா, நியூகாசல், செல்சி வெற்றி

1 mins read
59606c90-3714-415a-a6f0-8dfa7f4f8c7c
பிரஸ்டன் நார்த் எண்ட் என்ற அணியுடன் மோதிய செல்சி குழு 4-0 என்ற கோல் கணக்கில் வாகை சூடியது. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: சனிக்கிழமை பின்னிரவு நடந்த எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் ஆஸ்டன் வில்லா, நியூகாசல் யுனைடெட், செல்சி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

பிரஸ்டன் நார்த் எண்ட் என்ற அணியுடன் மோதிய செல்சி குழு 4-0 என்ற கோல் கணக்கில் வாகை சூடியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் அடிக்கத் தவறிய செல்சி இரண்டாவது பாதியில் கோல் மழை பொழிந்தது.

சண்டர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூகாசல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் 35, 46, 90 வது நிமிடங்களில் நியூகாசல் அணி கோல்கள் அடித்து அசத்தியது.

ஆஸ்டன் வில்லா 1-0 என்ற கோல் கணக்கில் மிடில்ஸ்பிரோ அணியை வீழ்த்தியது. விறுவிறுப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில் 87வது நிமிடத்தில் வில்லா கோல் அடித்து ஆட்டத்தை தன் வசப்படுத்தியது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று அணிகளும் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்