காற்பந்து: பிரேசிலுக்கு எதிராக தடை உத்தரவுகள் இருக்காது

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் காற்பந்துச் சங்கத் தலைவராக எட்னால்டோ ரொட்ரிகெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் தேசிய அணிக்கு எதிராக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படமாட்டா என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் சட்ட விவகாரப் பிரிவின் இயக்குநர் எமிலியோ கார்சியா ஜனவரி எட்டாம் தேதியன்று இதனைத் தெரிவித்தார்.

ரியோ டி ஜெனிரோ நகரின் நீதிமன்றம் ஒன்று, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஏழாம் தேதியன்று எட்னால்டோ பதவி விலகவேண்டும் என உத்தரவிட்டது. அதனையடுத்து இடைக்காலத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

பிரேசில் காற்பந்துச் சங்கத்தின் தேர்தல் முறை குறித்து எழுந்த கருத்துவேறுபாட்டால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் எட்னால்டோவை மீண்டும் பிரேசில் காற்பந்துச் சங்கத்தின் தலைவராக நியமிக்கவேண்டும் என்று அந்நாட்டின் மத்திய உச்சநீதிமன்ற அமைச்சர் கில்மார் மென்டெஸ் சென்ற வாரம் உத்தரவிட்டார். எட்னால்டோவைப் பதவிநீக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடுவது பிரேசில் அணியை அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளிலிருந்து நீக்க வழிவகுக்கக்கூடும் என்பது திரு மென்டெசின் வாதம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!