டி20: ரோகித் சர்மா புதிய சாதனை

சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா ஆக அதிக அனைத்துலக டி20 போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மொகாலியில் வியாழக்கிழமை நடந்த போட்டியின்போது அவர் இப்பெருமையைப் பெற்றார். அது அவருக்கு 149வது அனைத்துலக டி20 போட்டி.

அந்தப் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை எடுத்தது.

அதன்பின் பந்தடித்த இந்திய அணி 17.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இலக்கை எட்டியது. 40 பந்துகளில் 60 ஓட்டங்களை விளாசிய சிவம் துபே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தூரில் நடக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!