டோஹா: ஆசிய கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஜோர்தான், அதன் முதல் ஆட்டத்தில் மலேசியாவை 4-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது.
இந்த ‘இ’ பிரிவு ஆட்டத்தில் ஜோர்தானுக்கு ஆளுக்கு இரண்டு கோல்களைப் போட்டனர் மஹ்மூட் அல்-மார்டி, முசா அல்-டமாரி.
அல்-டமாரியின் முதல் கோல் பெனால்டி மூலம் விழுந்தது.
மற்றோர் ‘இ’ பிரிவு ஆட்டத்தில் பஹ்ரேனை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது தென்கொரியா. பிற்பாதியாட்டத்தில் பிரான்சின் பிஎஸ்ஜி குழுவில் விளையாடும் லீ காங்-இன் இரண்டு கோல்களைப் போட்டு தென்கொரியாவை வெல்லச் செய்தார்.
38வது நிமிடத்தில் ஹுவாங் இன்-பியோம் தென்கொரியாவை முன்னுக்கு அனுப்பினார். பின்னர் 51வது நிமிடத்தில் அப்துல்லா டுவாஜி கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
அதற்குப் பிறகு காங்-இன் இரண்டு கோல்களைப் போட்டார்.
‘டி’ பிரிவில் ஈராக், இந்தோனீசியாவை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது. இந்தோனீசியா, மலேசியா இரண்டும் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆசிய கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.