மொரின்யோ பதவிநீக்கம்

ரோம்: இத்தாலியக் காற்பந்துக் குழுவான ஏஸ் ரோமாவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியின் ‘செரி ஆ’ லீக்கில் போட்டியிடும் ரோமா செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 16) இச்செய்தியை வெளியிட்டது.

“ஜோசே மொரின்யோவும் அவருடன் இணைந்து பணியாற்றியோரும் உடனடியாக குழுவிலிருந்து வெளியேறுவர் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்,” என்று அறிக்கை ஒன்றில் ரோமா குறிப்பிட்டது. புதிய நிர்வாகியாக முன்னாள் ரோமா வீரர் டேனியெலா டி ரொசி நியமிக்கப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

‘செரி ஆ’ லீக் பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது ரோமா.

60 வயது மொரின்யோ, போர்ட்டோ, செல்சி, மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மட்ரிட், இன்டர் மிலான் உள்ளிட்ட ஐரோப்பாவின் முன்னணி குழுக்களின் நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கிறார். 2021ஆம் அண்டு மே மாதம் அவர் ரோமாவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

சென்ற பருவம் ரோமாவை யூரோப்பா லீக் போட்டியின் இறுதியாட்டத்துக்கு முன்னேறச் செய்தார். அதில் பெனால்டிகளில் ஸ்பெயினின் செவியாவிடம் தோல்வியடைந்தது ரோமா.

கடந்த ஆறு லீக் ஆட்டங்களில் ரோமா, ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மொரின்யோ பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!