மிலான்: இத்தாலிய காற்பந்து அணியின் ஆக முக்கிய வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த லுயிஜி ‘கிகி’ ரிவா காலமானார். அவருக்கு வயது 79.
‘இடியின் கர்ஜனை’ (ரோர் ஆஃப் தண்டர்) என செல்லமாக அழைக்கப்பட்ட ரிவா, இத்தாலிய அணிக்கு ஆக அதிக கோல்களைப் போட்டவர். 1970ஆம் ஆண்டில் அவர் நட்சத்திரமாக விளங்கிய கக்லியாரி குழு, இத்தாலியின் ‘சரீ ஆ’ லீக் விருதை வென்றது. அக்குழு அந்த ஒருமுறைதான் ‘சரீ ஆ’ லீக்கை வென்று வாகை சூடியது.
உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமையன்று இத்தாலியக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டம் நடைபெற்றது. நேப்பலியும் இன்டர் மிலானும் மோதிய அந்த ஆட்டத்தின் பிற்பாதியாட்டம் தொடங்குவதற்கு முன்பு ரிவாவுக்கு மரியாதை செலுத்த ஒரு நிமிடம் அமைதி அனுசரிக்கப்பட்டது.
1963ஆம் ஆண்டில் ரிவா, கக்லியாரியில் சேர்ந்தார். அக்குழுவுக்கு 200க்கும் அதிகமான கோல்களைப் போட்ட அவர், 1976ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.