இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் உடலுறுதியை மேம்படுத்தும் நோக்கில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் புது முடிவு எடுத்துள்ளது.
மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்துடன் உடற்பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் மிஸ்பா உல் ஹாக் தலைமையிலான பாகிஸ்தான் அணி ராணுவத்துடன் உடற்பயிற்சி மேற்கொண்டது.