ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக தகுதிபெறத் தவறிய பெண்கள் மேசைப் பந்து அணி

சிங்கப்பூர் பெண்கள் மேசைப் பந்து அணி முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறத் தவறிவிட்டது.

பெய்ஜிங்கில் நடைபெற்ற 2008 ஒலிம்பிக் போட்டியில் மேசைப் பந்து அறிமுகம் கண்டது. அதிலிருந்து தொடர்ந்து நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் பெண்கள் மேசைப் பந்து அணி பங்குபெற்று வந்தது.

போதிய அனுபவம் இல்லாதது தான் தகுதி பெறாததற்குக் காரணம் என்று சிங்கப்பூர் மேசைப் பந்து சங்கத்தின் போ லி சான் தெரிவித்தார்.

மேலும் தரவரிசையிலும் சிங்கப்பூர் பெண்கள் மேசைப் பந்து அணி சரிவைச் சந்தித்துள்ளது. 10வது இடத்தில் இருந்து அது 18வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற தரவரிசை முக்கியம். ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு தரவரிசையில் 11 முதல் 14 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். தகுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணி ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!