நியூசிலாந்து வீரர்களால் மெருகேறியுள்ள டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. வழக்கம்போல் அனைவரது பார்வையும் ஐந்து முறை கிண்ணம் வென்ற மகேந்திர சிங் டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மேல் தான் உள்ளது.

கடந்த ஆண்டு கிண்ணத்தை வென்ற சூப்பர் கிங்ஸ் இம்முறையும் பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது.

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் போட்டியில் இருந்து விலகி இருந்தாலும் நியூசிலாந்து வீரர்களின் வருகையால் சென்னை கூடுதல் பலம் பெற்றுள்ளது.

சென்னை ஆடுகளத்திற்கு ஏற்றவகையில் ஆடக்கூடியவர்கள் நியூசிலாந்தின் டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்செல். இது சென்னை அணிக்கு மேலும் பலத்தைக் கூட்டியுள்ளது.

இவர்கள் மூவரும் அண்மையில் இந்தியாவில் நடந்த உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக ரச்சின் ரவீந்திரா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சுழற்பந்து வீச்சிலும் அசத்தக் கூடிய ரச்சின் ரவீந்திரா சென்னை அணிக்கு இறுதிக்கட்டத்தில் பெருந்தூணாக இருப்பார் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் 22ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சேப்பாக்கத்தில் எதிர்த்து விளையாடவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!